திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா உறுதி; சேலத்திலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா உறுதி; சேலத்திலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா உறுதி; சேலத்திலும் வேகமெடுக்கும் பாதிப்பு!

இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சேலம் மாவட்டங்களின் பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 12,609 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சோழவரத்தில் 66 பேரும், மீஞ்சூரில் 27 பேரும், பூந்தமல்லியில் 23 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அதே போல வேலூர் மாவட்டத்தில் புதிதாக 110 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5,432 ஆக உயர்ந்துள்ளது.