சேலம்: சிறப்பு பூஜை எனும் பெயரில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த மாந்திரீகவாதி கைது

 

சேலம்: சிறப்பு பூஜை எனும் பெயரில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த மாந்திரீகவாதி கைது

சேலம் சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜ் பேகம் (55) என்பவரிடம், வீட்டில் தோஷம் இருப்பதாகவும், அதை கழிக்க சிறப்புபூஜை நடத்த வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் சேலத்தை சேர்ந்த மாந்திரீகவாதி பிரபு(40).

பிரபு சொன்னதை நம்பிய மெகதாஜ்பேகம், கடந்த மே மாதம் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது அவரை விபூதி, குங்குமம் வாங்கி வருமாறு வெளியே அனுப்பிய பிரபு, வீட்டிலிருந்த 25 பவுன் நகையை திருடிச்சென்று விட்டார். பின்னர், இதனை தெரிந்து கொண்ட மெகராஜ் பேகம், எடுத்த நகையை திரும்ப தன்னிடம் கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளார். ஆனால் நகையை எடுக்கவில்லை எனவும், தொடர்ந்து தொந்தரவு செய்தால் செய்வினை வைத்து விடுவேன் என்றும், ரத்தம் கக்கி சாவாய் எனவும் மாந்திரீகவாதி பிரபு மிரட்டியுள்ளார்.

சேலம்: சிறப்பு பூஜை எனும் பெயரில் வீடுகளில் கொள்ளையடித்து வந்த மாந்திரீகவாதி கைது

இதனால் அதிர்ச்சிடைந்த மெகதாஜ் பேகம், சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பிரபுவை பிடித்து நடத்திய விசாரணையில், நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், திருடிய நகையை சேலத்தில் பெரிய நகைக் கடைகளில் விற்பனை செய்ததும், பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்கியதும், அதைக்கொண்டு டூவீலர் மற்றும் நிலம் வாங்கியதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவரிடம் இருந்து டூவீலர் மற்றும் நிலபத்திரம், 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், மாந்திரீகம் செய்து விடுவதாக மிரட்டி, இதுபோல் பலரிடம் பிரபு மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.