சேலம்- கணவர் தீவைத்ததால் பக்கத்து வீட்டில் புகுந்த பெண் – குழந்தை பலி

 

சேலம்- கணவர் தீவைத்ததால் பக்கத்து வீட்டில் புகுந்த பெண் – குழந்தை பலி

சேலம்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி கணவர் தீவைத்ததில், பக்கத்து வீட்டை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. சேலம் மாவட்டம் ஆறகளூர் கிராமம் கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் மருதமுத்து (42). இவருக்கு தெய்வானை (35) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தெய்வானைக்கு, பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் கள்ளத்தொடர்பு

சேலம்- கணவர் தீவைத்ததால் பக்கத்து வீட்டில் புகுந்த பெண் – குழந்தை பலி

உள்ளதாக சந்தேகமடைந்த மருதமுத்து, நேற்று மாலை தெய்வானை மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார். அப்போது உயிர் பிழைக்க தப்பியோடிய தெய்வானை அருகிலுள்ள மணிகண்டன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதில், மணிகண்டனின் மனைவி திவ்யா மற்றும் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த அவரது 3 வயது குழந்தை தனுஸ்ரீ ஆகியோர் மீது தீப்பற்றியுள்ளது. இதில் குழந்தை தனுஸ்ரீ படுகாயமடைந்த நிலையில்,

சேலம்- கணவர் தீவைத்ததால் பக்கத்து வீட்டில் புகுந்த பெண் – குழந்தை பலி

தெய்வானை, திவ்யா ஆகியோர் லேசான தீக்காயம் அடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தனுஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து, மருதமுத்து மீது கொலைவழக்கு பதிவுசெய்த தலைவாசல் போலீசார், அவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.