செயில் லாபம் 31 சதவீதம் வளர்ச்சி.. பங்கு ஒன்றுக்கு ரூ.1.80 டிவிடெண்ட் அறிவிப்பு

 

செயில் லாபம் 31 சதவீதம் வளர்ச்சி.. பங்கு ஒன்றுக்கு ரூ.1.80 டிவிடெண்ட் அறிவிப்பு

செயில் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,469.88 கோடி ஈட்டியுள்ளது.

உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. செயில் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,469.88 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் செயில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,647.52 கோடி ஈட்டியிருந்தது.

செயில் லாபம் 31 சதவீதம் வளர்ச்சி.. பங்கு ஒன்றுக்கு ரூ.1.80 டிவிடெண்ட் அறிவிப்பு
உருக்காலை

2021 மார்ச் காலாண்டில் செயில் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாய் 44 சதவீதம் உயர்ந்து ரூ.23,284 கோடியாக உயர்ந்துள்ளது. 2021 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, செயில் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.35,350 கோடியாக குறைந்துள்ளது. செயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1.80 டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது.

செயில் லாபம் 31 சதவீதம் வளர்ச்சி.. பங்கு ஒன்றுக்கு ரூ.1.80 டிவிடெண்ட் அறிவிப்பு
உருக்கு

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது செயில் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.63 சதவீதம் உயர்ந்து ரூ.137.25ஆக அதிகரித்தது.