சாயிடம் தன்னம்பிக்கையுடன் வந்தால் வெற்றி நிச்சயம்!

 

சாயிடம் தன்னம்பிக்கையுடன் வந்தால் வெற்றி நிச்சயம்!

நீ என் செல்ல பிள்ளை உன்னை ஓருபோதும் தனித்து விட மாட்டேன் உனக்கு பக்கபலமாய் நான் என்றும் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை கையில் வைத்து என் உயிராய் வாழ வைப்பேன்.
நீ நீயாக இரு யாரையும் சார்ந்து இருக்காதே.
உனது வாழ்க்கையை நிர்ணயம் செய்தவன் நான். முதலில் நீ அனுபவித்து வந்த வாழ்க்கையும் சரி, இப்போது நீ அனுபவிக்கும் வாழ்க்கையும் சரி, இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் உணர்ந்து கொள்ள முயற்சி செய்.

சாயிடம் தன்னம்பிக்கையுடன் வந்தால் வெற்றி நிச்சயம்!

இப்போது அனுபவித்து வரும் அத்தனையும் நான் உனக்கு அளித்த ஆசிர்வாதம். வாழ்க்கையில் தேடும் ஒன்று உன்னை விட்டு தள்ளி செல்கிறது என்று யோசிக்கிறாயா.உன் பிரச்சினைகள் என்னவென்று நீ சொன்னால் தான் எனக்கு தெரியுமா?

உனக்குள்ளே தானே இருக்கின்றேனே நான் உனக்கு புலப்படவில்லையா?. என்னை நீ மறந்துவிட்டாய் என்றும், உதாசீனப்படுத்தி விட்டாய் என்றும் நான் கூறவில்லை. அவ்வாறு செய்யவும் மாட்டாய். ஆனால், என்னிடம் பேசும் போது நடந்து முடிந்த கஷ்டத்தை பற்றிய புலம்பல் மட்டுமே கூறுகிறாயே.

சாயிடம் தன்னம்பிக்கையுடன் வந்தால் வெற்றி நிச்சயம்!

நான் உங்களிடத்தில் புலம்பகூடாதா என்று தானே உன் மனதில் கேள்வி? நான் உன்னிடம் அப்படி கூறுவேனா? முடிந்ததை புலம்பி நீ என்ன சாதித்தாய். அதை தான் உன்னிடத்தில் சொல்ல வருகிறேன். என் துணை எப்போதும் உனக்கு இருக்கும். நீ தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும் எப்போதும். தொலைந்து போன பொருளை நினைத்து வருந்துவதால் நீ பெற்றது ஒன்றும் இல்லை. அர்த்தமற்ற புலம்பலால் மன அமைதியையும் நிம்மதியையும் இழக்கிறாய்.

அதற்கு நீ அடுத்து என்ன செய்ய வேண்டும். எனக்கு வழி காட்டுங்கள் என விழிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் தான் என்னிடத்தில் வர வேண்டும் என்று சொல்கிறேன். நீ நினைத்ததை விட அதிகமாக ஜெயிப்பாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன்.

சாயிடம் தன்னம்பிக்கையுடன் வந்தால் வெற்றி நிச்சயம்!

உன் வாழ்வில் நீ பார்த்த சில விஷயங்கள் உன் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது அதையொட்டி மனதளவில் உள்ள பாதிப்புதான் உன் எண்ணங்களாய் வெளிப்படுகிறது.

உன் ஆதங்கம் எனக்கு புரிகிறது. உன்னை எப்படி மாற்றிக் கொள்வது, ஏன் இந்த நிலை எனக்கு, என்று நீ விடும் கண்ணீர் அனைத்திற்கும் என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அவற்றை உண்மையான மனத்தோடு ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவதில் உன் பிடிவாத குணம் தெரிகிறது.

அது என்றைக்கு மறைக்கிறதோ அன்று நீ உன்னிடத்தில் ஆசைப்பட்ட அத்தனை மாறுதல்களும் நடக்கும். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே.

உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்பாபா நான் அறிவேன்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்! ஓம் ஸ்ரீ சாய் ராம்!! ஓம் ஸ்ரீ சாய் ராம்!!!

-வித்யா ராஜா