தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை – சகாயம் ஐ.ஏ.எஸ்

 

தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை – சகாயம் ஐ.ஏ.எஸ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் பாதை அமைப்பின் தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், “மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டங்கள் தொடர்பாக கொடுக்கின்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை – சகாயம் ஐ.ஏ.எஸ்

சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தவறு இழைக்கின்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து புகார்கள் வருகின்ற போதே தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை. இளம் தலைமுறையினர்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். நல்லவர்கள் யார் என்பதை இளைஞர்கள் அடையாளம் கண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.” எனக் கூறினார்.