கோயம்பேட்டில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு! 6 மணி நேரத்தில் காவல்துறை அதிரடி

 

கோயம்பேட்டில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு! 6 மணி நேரத்தில் காவல்துறை அதிரடி

கோயம்பேடு மார்க்கெட் அருகே கடத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தை 6 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது.

விழுப்புரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மார்க்கெட்டிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை ரமேஷின் 3 மாத பெண் குழந்தையை மர்ம கும்பல் கடத்திச் சென்றுள்ளது. இது தொடர்பாக, கோயம்பேடு காவல்நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனையடுத்து, அண்ணாநகர் துணை ஆணையரிடம் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

கோயம்பேட்டில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு! 6 மணி நேரத்தில் காவல்துறை அதிரடி

காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காணாமல்போன சுமைதூக்கும் தொழிலாளியின் 3 மாத குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டை முட்புதர் பகுதியிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியிலிருந்து குழந்தையை மீட்ட போலீசார் அங்கு வீசி சென்றவர்கள் யார் என விசாரணை நடத்திவருகின்றனர்.