” வேலையிலிருந்து நீக்கினேன் ,பாலியல் புகாரில் சிக்கினேன்”-பெண் ஊழியர் மீது மோசடி புகார் கூறும் அதிகாரி ..

 

” வேலையிலிருந்து நீக்கினேன் ,பாலியல் புகாரில் சிக்கினேன்”-பெண் ஊழியர் மீது மோசடி புகார் கூறும் அதிகாரி ..

மைய அரசின் தேசிய ஆயுஷ் மிஷனின் இயக்குனர் மீது நேற்று ஒரு பெண் பாலியல் புகார் கூறியதற்கு, பதிலுக்கு அந்த அதிகாரி அந்த பெண் மீது மோசடி புகார் கூறியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது .

” வேலையிலிருந்து நீக்கினேன் ,பாலியல் புகாரில் சிக்கினேன்”-பெண் ஊழியர் மீது மோசடி புகார் கூறும் அதிகாரி ..
ஒடிஷா மாநிலத்தில் புவனேஷ்வரில் உள்ள தேசிய ஆயுஷ் மிஷனின் இயக்குனர் சாரங்கி மீது அங்கு பணிபுரியும் 25 வயது பெண் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சாரங்கி, தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார் .ஆனால் சாரங்கி அதை மறுத்து, அந்த பெண் மோசடி செய்து வேலைக்கு சேர்ந்ததை நான் கண்டறிந்து வேலைநீக்கம் செய்ய இருந்ததால் இப்படி புகார் கூறுவதாக மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார் .
அவர் மேலும் கூறுகையில் அவர் PMU தலைவரின் நெருங்கிய கூட்டாளி என்றும், அவரின் செல்வாக்கில் தமக்கு முன்னாடியே அவர் இங்கு வேலைக்கு சேர்ந்து விட்டதாகவும் ,அவரோடு சேர்ந்து கொண்டு இருவரும் பல போலி ஆவணங்கள் தயார் செய்து அவர் இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.இதை தாம் கண்டுபிடித்து இருவரையும் வேலை நீக்கம் செய்ய இருந்தேன் .அதனால் கடுப்பான அவர் அந்த பெண்ணை தூண்டிவிட்டு இப்படி என் மீது பாலியல் புகாரை அபாண்டமாக சுமத்தியுள்ளதாக அவர் கூறினார் .

” வேலையிலிருந்து நீக்கினேன் ,பாலியல் புகாரில் சிக்கினேன்”-பெண் ஊழியர் மீது மோசடி புகார் கூறும் அதிகாரி ..
அதனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவை போலியாக ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி எதிர் புகார் அளித்தார். இது பற்றி போலீசாரும் ,உயர் அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .