கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு கொரோனா – “அனைவரும் பத்திரமாக இருங்கள்” என உருக்கமான ட்வீட்!

 

கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு கொரோனா – “அனைவரும் பத்திரமாக இருங்கள்” என உருக்கமான ட்வீட்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதால் அதன் தாக்கம் அதிவேகமாக இருக்கிறது. இந்த வகை வைரஸ் முந்தையை வைரஸை விட வீரியமிக்கது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு கொரோனா – “அனைவரும் பத்திரமாக இருங்கள்” என உருக்கமான ட்வீட்!

இதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன. தற்போது பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று பரவிவருகிறது. சமீபத்தில் நடிகர் அமீர்கானுக்கும் மாதவனுக்கும் அடுத்தடுத்த நாளில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இச்சூழலில் கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்றியப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ள சச்சின், “நானே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்தேன். தற்போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. எனக்கு லேசான அறிகுறிகள் தென்படுகின்றன. வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. அதனால் வீட்டிலேயே நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். முறையான கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் வழங்கிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.