“பேட் சரி செய்தவரின் உடல் நிலையை சரி செய்யும் டெண்டுல்கர்” -நன்றி மறக்காத சச்சின்

 

“பேட் சரி செய்தவரின் உடல் நிலையை சரி செய்யும் டெண்டுல்கர்” -நன்றி மறக்காத சச்சின்

இந்திய கிரிக்கெட்டில் பல சாதனைகள் செய்துவிட்டு இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர் சச்சின் டெண்டுல்கர் எப்போதுமே நன்றி மறக்காதவர் என்பதற்க்கு இந்த சம்பவத்தை உதாரணமாக கூறலாம் .
சச்சினுக்கு ஆரம்ப காலம் முதல் கிரிக்கட்டில் புகழ் பெற்ற காலம் வரை அவருக்கு பேட் சரிசெய்து அவருக்கு பல புதிய பேட் தயாரித்து வழங்கிய அஷ்ரப் என்பவர் இப்போது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

“பேட் சரி செய்தவரின் உடல் நிலையை சரி செய்யும் டெண்டுல்கர்” -நன்றி மறக்காத சச்சின்


இந்த தகவலை கேள்விப்பட்ட சச்சின் அவரிருக்கும் மருத்துவமனைக்கு சென்று அவரின் மருத்துவ செலவுகளை தானே ஏற்றுக்கொண்டார் .இந்த சம்பவத்தினை கூட அஷ்ரபின் நெருங்கிய நண்பர்தான் வெளியிட்டார் .
மேலும் அஷ்ரப், சச்சின் ,விராட் கோலி போன்ற வீரர்கள் சிக்சர் அடிக்கும் விதமாக பல பேட் களை தயாரித்து கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் .அவர் தயாரித்து கொடுத்த பேட் மூலம் பல சிக்சர்களும் ,பௌண்டரிகளும் அடித்த சச்சின் நன்றி மறக்காமல் அவருக்கு இந்த உதவியை செய்துள்ளார் .
அஷ்ரப் எப்போது சர்வதேச கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் வான்கடே மைதானத்திற்குள் சச்சின் பேட்டை சரி செய்ய அங்கு அமர்ந்திருப்பார் .மேலும் அவர் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீர்களின் மட்டைகளை கூட சரி செய்து கொடுத்துள்ளார் .