இன்று திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்!

 

இன்று திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்!

கொரோனா காரணமாக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் தற்போது கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இன்று திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்!

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் ஆவணி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி திறக்கிறார். இன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது என்பதால் கோவில் நடை திறந்து இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படுகிறது.

இன்று திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்!

மீண்டும் நாளை காலை 5 மணிக்கு திறக்கப்படும் நடையானது நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை நடைபெறும். பின்பு காலை 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை உடன் மீண்டும் இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. கொரோனா காலம் என்பதால் தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது தொடர்கிறது.