ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டம்… நிறவெறிக்கு எதிரான அமைப்பு ஹாலிவுட் நடிகர் ரயான் ரெனால்ட்ஸ் நிதி உதவி

 

ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டம்… நிறவெறிக்கு எதிரான அமைப்பு ஹாலிவுட் நடிகர் ரயான் ரெனால்ட்ஸ் நிதி உதவி

அமெரிக்காவில் நிற வெறி காரணமாக ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நிறவெறிக்கு எதிரான கூட்டமைப்பு நிதி உதவி செய்வதாக பிரபல ஹாலிவுட் நடிகர் ராயன் ரெனால்ட்ஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வெள்ளை போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட்ஸ் என்பவரை கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக மிதித்து கொலை செய்தார். இந்த வீடியோ செய்தி, சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதனால், அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டம்… நிறவெறிக்கு எதிரான அமைப்பு ஹாலிவுட் நடிகர் ரயான் ரெனால்ட்ஸ் நிதி உதவி
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரயான் ரெனால்ட்ஸ் மற்றும் அவரது மனைவி பிளேக் லைவ்லி இருவரும் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான தேசிய கூட்டமைப்புக்கு 200,000 டாலர் நிதியுதவி அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சட்டத்தில் இருக்கும் வெவ்வேறு விதிமுறைகள் குறித்தோ அல்லது காரிலிருந்து வெளியே இழுக்கப்படுவது குறித்தோ எங்கள் குழந்தைகளை தயார் செய்வது குறித்து நாங்கள் கவலைப்பட்டதில்லை. ஆனால் அதை தினமும் அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. அந்த பயம் மற்றும் கோபத்தை எங்களால் கற்பனை கூட செய்யமுடியவில்லை.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டம்… நிறவெறிக்கு எதிரான அமைப்பு ஹாலிவுட் நடிகர் ரயான் ரெனால்ட்ஸ் நிதி உதவி
கடந்த காலங்களில் நிறவெறியை நமக்குள் வேர்விட அனுமதித்தது குறித்து வெட்கப்படுகிறோம். எனவே எங்கள் குழந்தைகளை அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்ற மனிதர்களுக்கு வலியை ஏற்படுத்தாமல் இருக்க இந்த மோசமான விஷயம் அவர்களுக்கு ஊடுருவி விடாமல் அவர்களை வளர்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

 

View this post on Instagram

 

@naacp_ldf

A post shared by Blake Lively (@blakelively) on

ஜார்க் ஃபிளாய்ட், அஹமாத் ஆர்பெரி, ப்ரியோன்னா டைலர், எரிக் கார்னர் உள்ளிட்டோர் மட்டுமல்லாது கேமராவில் பதிவு செய்யப்படாத ஏராளமான கறுப்பின ஆண்கள் மற்றும் பெண்களின் மரணங்களுக்கு இதுதான் நாங்கள் செய்யும் கவுரவமாக இருக்கும். கடந்த வாரம் நிறவெறிக்கு எதிரான தேசிய கூட்டமைப்புக்கு 200,000 டாலர் நிதியுதவி வழங்கியுள்ளோம். அதன் தலைவர் ஷெரிலின் இஃபில் உடன் உறுதுணையாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.