“இன்னும் 15 நாட்களில் இந்தியாவிற்கு ஆக்சிஜன்” – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!

 

“இன்னும் 15 நாட்களில் இந்தியாவிற்கு ஆக்சிஜன்” – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் சிக்கி இந்தியா திணறி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இதனால் டெல்லியில் மட்டுமே கடந்த மூன்று நாட்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். தவிர ரெம்டெசிவிர் மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்திருக்கின்றன.

“இன்னும் 15 நாட்களில் இந்தியாவிற்கு ஆக்சிஜன்” – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!

முன்னதாக பாகிஸ்தான் நாடு இந்தியாவிற்கு கொரோனா நிவாரணத்தை அறிவித்தது. தற்போது ரஷ்யாவும் அறிவித்துள்ளது. அதன்படி சுமார் 4 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளும் இந்தியாவிற்குத் தேவையான ஆக்சிஜனும் கொடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளது. ஆக்சிஜன் இன்னும் 15 நாட்களில் இந்தியாவிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் உதவ வேண்டுமென அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அதிபர் பைடனை வலியுறுத்தி வருகின்றனர்.