ஊரக உள்ளாட்சி தேர்தல் – 97 ஆயிரத்து 831 வேட்புமனுக்கள் தாக்கல்!

 

ஊரக உள்ளாட்சி தேர்தல் – 97 ஆயிரத்து 831 வேட்புமனுக்கள் தாக்கல்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 25ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் – 97 ஆயிரத்து 831 வேட்புமனுக்கள் தாக்கல்!

இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விபரத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ,கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களுக்கான காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

ஊரக உள்ளாட்சி தேர்தல் – 97 ஆயிரத்து 831 வேட்புமனுக்கள் தாக்கல்!

இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72071 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மொத்தம் 97 ஆயிரத்து 831 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.