தஞ்சையில் ஓடும் காரில் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

 

தஞ்சையில் ஓடும் காரில் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

தஞ்சாவூர்

தஞ்சை அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றிய சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். பொறியாளர். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் அருகே வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.

தஞ்சையில் ஓடும் காரில் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

இதனை கண்ட சுரேஷ்குமார், காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, வாகனத்தில் இருந்தவர்களை வெளியேற்றினார். அப்போது, காரின் முன் பகுதியில் தீடீரென தீப்பற்றி மளமள வென பிற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் கார் சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. விபத்து குறித்து, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.