ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை- ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு

 

ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை- ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு

வரும் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை- ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு

2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும். இந்நிலையில் தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாட்டு பணிகள் நடைபெறவிருப்பதால், வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனைகள் நடைபெறாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு, பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மாறாக என்.இ.எஃப்.டி முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.