ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா… அதிர்ச்சியில் தொண்டர்கள்!

 

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா… அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ரதாண்டவமாடுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சாமானியன் வரை அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இச்சூழலில் தற்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கொரோனா… அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில், ‘‘கொரோனா அறிகுறியுடன் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடன் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷியும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.