கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஆர்.எஸ்.பாரதி
Sep 29, 2020, 08:18 IST1601347730000
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு (வயது 73) கடந்த 24 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அவர் கடந்த 19 ஆம் தேதி சென்னை திரும்பினார் . இதை தொடர்ந்து திடீர் உடல்நலக்குறைவால் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். லேசான அறிகுறியே இருந்ததால் அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிகிறது.