சசிகலாவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஆனா! பொடி வைத்து பேசும் ஆர் எஸ் பாரதி

 

சசிகலாவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஆனா! பொடி வைத்து பேசும் ஆர் எஸ் பாரதி

சசிகலாவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் நடராஜன் எங்களிடம் இருந்து சென்றவர் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, “திமுகவில் புதிய கூட்டணி சேர்ப்பது குறித்து ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். கமல்ஹாசன் திமுக கூட்டணி வருவாரா இல்லையா என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை. எங்களை பொருத்தவரை எங்கள் தலைவர் ஸ்டாலின். எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அவர் சொல்வதைதான் கேட்கின்றன. ராகுல்காந்தி கூட ஸ்டாலினிடம்தான் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி இருந்தாலும் எங்களால் தமிழகத்தை சிறப்பாக ஆள முடியும், மத்திய அரசுடன் கூட்டாட்சி செய்ய அறிவுக்கூர்மை இருந்தாலே போதும். திமுக வெற்றியை எப்பாடு பட்டாலும் தடுக்க வேண்டுமென டிடிவி தினகரன் அறிக்கை விடுகிறார். இதிலிருந்தே அவருக்கும் திமுகவுக்கும் எந்தவிதமான கூட்டணியும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

சசிகலாவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஆனா! பொடி வைத்து பேசும் ஆர் எஸ் பாரதி

சசிகலாவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் நடராஜன் எங்களால் உருவாக்கப்பட்டு எங்களிடம் இருந்து சென்றவர் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி குறித்து பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளனர். அதற்கு இன்னும் 20 நாட்களில் அதிமுகவால் வன்னியர் இட ஒதுக்கீட தொடர்பாகஎதுவும் செய்யமுடியாது. ஸ்டாலின் முதல்வரானால் ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும், திமுகவுக்கு வரும் சட்டமன்ற தேர்தல் சவாலானதாக இருக்கும்,” எனக் கூறினார்.