மதுரையில் ரூ.98 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்- 2 பெண்களிடம் விசாரணை

 

மதுரையில் ரூ.98 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்- 2 பெண்களிடம் விசாரணை

மதுரை

துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கடத்திவரப்பட்ட 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இதுதொடர்பாக 2 பெண்களை கைதுசெய்தனர். துபாயிலிருந்து மதுரைக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரையில் ரூ.98 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்- 2 பெண்களிடம் விசாரணை


அப்போது, திருச்சியை சேர்ந்த ஜெயலானி மற்றும் ஜெயராணி ஆகியோர், தங்கத்தை மெழுகுபோன்று வளையும் தன்மையுடையக மாற்றி, உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து சுமார் 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைதுசெய்த சுங்க இலாகா அதிகாரிகள், தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.