தியேட்டர்கள் திறக்காததால் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பு!

 

தியேட்டர்கள் திறக்காததால் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் சூழலிலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், பயணிகள்,மால்கள், பூங்காக்கள் என அனைத்தும் செயல்பட அனுமதி அளித்த அரசு திரையரங்குகளுக்கு மட்டும் திறக்க அனுமதிக்கவில்லை. திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், ஏசியுடன் செயல்பட்டால் கொரோனா பரவ அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அரசு காரணம் காட்டியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. இத்திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை திரையரங்க உரிமையாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

தியேட்டர்கள் திறக்காததால் ரூ.9 ஆயிரம் கோடி இழப்பு!

இதனிடையே கொரோனா பரவலால் நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ரூ. 9 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மல்டிப்பெளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளால் நேரடியாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், மறைமுகமாக லட்சத்திற்கும் மேற்பட்டோரும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். எனவே திரையரங்குகளை திறக்க விரைவாக அனுமதிக்க வேண்டும் என்றும் மல்டிப்பெளக்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகளும் திரையரங்கு உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.