டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை!
Aug 25, 2020, 10:49 IST1598332786000
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் கோயில்கள், கேளிக்கை விடுதிகள் என பொழுதுபோக்கு அம்சங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆனால் அரசின் நிதி பற்றாக்குறை காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ரூ. 66 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். டாஸ்மாக் கடையை கடப்பாரையால் உடைத்ததுடன், சிசிடிவி கன்ட்ரோல் யூனிட்டையும் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.