சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்!

 

சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்!

சென்னை

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து கடத்திய ரூ.65 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று காலை வந்த சிறப்பு விமானத்தில் பயணிகள் இறக்கிய பின், ஊழியர்கள் விமானத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமானத்தின் கழிவறையில் தட்டு வடிவிலான தங்கம் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.

இதனை அடுத்து, விமான ஊழியர்கள் சுங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சுங்கத் துறையினர் சுமார் ரூ.48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்!

இதேபோல், விமான நிலைய கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவிலான 17 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 356 கிராம் தங்கத்தையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தங்கத்தை கழிவறையில் வீட்டுச்சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.