சென்னை வந்த விமானத்தின் கழிவறையில், ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்!

 

சென்னை வந்த விமானத்தின் கழிவறையில், ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்!

சென்னை

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து கடத்திய ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், துபாயில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சென்னை வந்த விமானத்தின் கழிவறையில், ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்!

அப்போது, விமானத்தின் கடைசி 2 கழிவறைகளில் தங்கத்தை பொட்டலங்களாக மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றி பிரித்து பர்த்தபோது ஒன்றில் 583 கிராம் எடையிலான தங்க பிஸ்கட்டுகளும், மற்றொரு பொட்டலத்தில் 870 கிராம் பசை வடிவிலான தங்கமும் கடத்தி வந்தது தெரியவந்தது.

இரு பொட்டலங்களிலும் மொத்தமாக ரூ.65 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 360 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கத்தை கழிவறையில் விட்டு சென்ற நபர் குறித்து, சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.