சென்னையில் ரூ.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

 

சென்னையில் ரூ.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

சென்னை

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் பேரில் சென்னையை சேர்ந்த அபூபக்கர் என்ற பயணியை தனியே அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் ரூ.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

இந்த சோதனையில் அபூபக்கர் கால் சாக்ஸ்கள் மற்றும் மூட்டு வலிக்கு பயன்படுத்தப்படும் கால் காப்பிலும் தங்கத்தை தூள் வடிவில் மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் 6 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் 1 கிலோ 35 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சர்வதேச மதிப்பு சுமார் 62 லட்சத்து, 35ஆயிரம் ரூபாய் ஆகும். தங்கம் கடத்தல் தொடர்பாக, சென்னையை சேர்ந்த அபூபக்கரை சுங்க அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.