நாகை அருகே ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – மூவர் கைது!

 

நாகை அருகே ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – மூவர் கைது!

நாகை

நாகை அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைதுசெய்தனர்.

நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வேட்டைக்காரனிருப்பு பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வேட்டைகாரனிருப்பு அருகேயுள்ள கண்டியன்காடு பகுதியில் இன்று கடலோர காவல் குழும போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நாகை அருகே ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – மூவர் கைது!

அப்போது, கலைச்செல்வன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அங்கிருந்து சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை, நாகை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த கலைச்செல்வன், சந்திரசேகரன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.