சமயபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்த ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

 

சமயபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்த ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

திருச்சி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 4,320 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தெற்கு இருங்களூர் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கிவைத்து, விற்பனை செய்யப்படுவதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சமயபுரம் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் தெற்கு இருங்களூரை சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் லாரன்சுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சமயபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்த ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

அப்போது, வீட்டில் ஏராளமான அட்டை பெட்டிகளில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, வீட்டில் 90 அட்டை பெட்டிகளில் இருந்த 4 ஆயிரத்து 320 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் ஆகும்.

இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரன்ஸை தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சியில் ஒரே நேரத்தில் பல லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.