சென்னையில் ரூ.6.6 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல்!

 

சென்னையில் ரூ.6.6 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல்!

சென்னை

வெளிநாட்டில் இருந்து பார்சல் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான புளு பனீஷர் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு போதை பொருட்கள் அடங்கிய பார்சல் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அஞ்சலக வேவு தகவல் பிரிவினர் மீனம்பாக்கத்தில் உள்ள வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்களை சோதனையிட்டனர்.

சென்னையில் ரூ.6.6 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல்!

அப்போது, நெதர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு பார்சல்கள் பதிவு செய்யப்படாமல் வந்தது தெரியவந்தது.அதனை பரிசோதித்ததில் நீல வண்ணத்தில் இருந்த மாத்திரைகள் மற்றும் படிக வடிவ பொடிகள் காணப்பட்டன. இவற்றை சோதனையிட்டதில் இவை புளு பனீஷர் எனப்படும் எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் மற்றும் மெத் படிகங்கள் என கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து இரு பார்சல்களில் இருந்தும் சுமார் 77 கிராம் எடையுள்ள 100 நீல வண்ண மாத்திரைகள் மற்றும் 26 மெத் படிகங்கள் ஆகியன போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுதொடர்பாக, சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, போதை பொருட்களை கடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.