திருவையாறில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.6.10 லட்சம் பறிமுதல்!

 

திருவையாறில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.6.10 லட்சம் பறிமுதல்!

தஞ்சாவூர்

திருவையாறு அருகே காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள தில்லைஸ்தானம் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டபோது, காரில் 6 லட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது.

திருவையாறில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.6.10 லட்சம் பறிமுதல்!

இதுதொடர்பாக காரில் வந்த தனியார் நிறுவன மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பொதுமக்களுக்கு கடன் வழங்குவதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பின்னர் அதனை மாவட்ட கரூவூல அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.