சென்னையில் ரூ.51.28 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

 

சென்னையில் ரூ.51.28 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

சென்னை

சென்னையில் துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.51 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து நேற்று அதிகாலை துபாய் செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் பயணிக்கவிருந்த, திருச்சியை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரை, சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில், அவரது டிராலி பேக் கைப்பிடிக்குள் மறைத்து அமெரிக்கா டாலர்கள், சவுதி ரியால் கரன்சி நோட்டுகளை கடத்தியவது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 10 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் ரூ.51.28 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

முன்னதாக, நேற்று முன்தினம் இரவு சென்னையில் துபாய்க்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கவிருந்த, சென்னை,தேனி, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 4 பேரை பிடித்து, சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, 4 பேரும் அதே பாணியில் டிராலிபேகின் கைப்பிடிக்குள் மறைந்து அமெரிக்க டாலர்கள், ஓமன் ரியால், குவைத் தினார்களை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து சுமார் 41 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரையும் கைதுசெய்த சுங்கத் துறையினர், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.