பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

 

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடப்பட்டுள்ளார். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவச அரசு காப்பகம் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் . குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசு ஏற்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படு. ம் அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் அல்லது உறவினர் பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் தலா 3 ஆயிரம் உதவித்தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும். இவை அனைத்தும் ஒரு சிறப்பு குழுவால் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்பர் என்று தெரிகிறது.