சென்னையில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

 

சென்னையில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான 937 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது உசேன்(28) மற்றும் நாகையை சோ்ந்த முகமது அசாரூதின்(31) ஆகியோரை, தனியே அழைத்துச்சென்று சோதணையிட்டனா்.

சென்னையில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

அப்போது, அவர்கள் தங்கத்தை தகடு மற்றும் பேஸ்ட் வடிவில் மாற்றி உள்ளாடைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து சுமார் 48 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் இருவரையும் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.