சென்னையில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

 

சென்னையில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

சென்னை

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வெளிநாடுகளில் இருந்து வந்த விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களது உடமைகளை சங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்த பயணி ஒருவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, தங்கத்தை பசை வடிவில் மாற்றி ஆசனவாயில் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து 416 கிராம் அளவிலான 2 தங்கப்பசை உருளைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

அதேபோல், சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் பயணிகளை இறக்கிய பின் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, விமானத்தின் இருக்கையின் அடியில் தங்கத்தை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் சுங்க அதிகாரிகள் விமான இருக்கையில் கடத்திவந்த 600 கிராம் அளவிலான 6 தங்க பிஸ்கட்களை கைப்பற்றினர்.

இந்த இரு சம்பவங்களிலும் சேர்த்து சுமார் 48 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 1.01 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒரு பயணியை பிடித்து சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.