வாகனங்களுக்கு ஆர்.சி.புக் வழங்க ரூ.4,500 லஞ்சம்… பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!

 

வாகனங்களுக்கு ஆர்.சி.புக் வழங்க ரூ.4,500 லஞ்சம்… பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!

தஞ்சாவூர்

தனியார் நிறுவன வாகனங்களுக்கு ஆர்.சி.புக் வழங்க ரூ.4,500 லஞ்சம் பெற்ற புகாரில் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிபவர் கலைச்செல்வி(45). இவர் மீது தஞ்சையில் செயல்பட்டு வரும் வாகன விற்பனை நிறுவன மேலாளர்கள் அருண், அந்தோணி யாகப்பா ஆகியோர லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில், தங்களது நிறுவனத்தில் விற்பனை செய்து லோடு ஆட்டோ உள்ளிட்ட 3 வாகனங்களுக்கு ஆர்.சி.புக் பெற ரூ.4,500 லஞ்சமாக தர வேண்டும் என கலைச்செல்வி, இடைத்தரகர் கார்த்திகேயன் என்பவர் மூலம் கேட்டதாக கூறி இருந்தனர்.

வாகனங்களுக்கு ஆர்.சி.புக் வழங்க ரூ.4,500 லஞ்சம்… பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.4,500 பணத்தை வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடம் வழங்கும்படி, அவர்களுக்கு அறிவுறுத்தினர். அதன் படி, நேற்று பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்ற அருண் மற்றும் அந்தோணி யாகப்பா ஆகியோர் ரூ.4,500 லஞ்ச பணத்தை இடைத்தரகர் கார்த்திகேயனிடம் வழங்கினர். தொடர்ந்து, அவர் கலைச்செல்வியிடம் அந்த பணத்தை கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜு தலைமையிலான போலீசார் கையும் களவுமாக இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.