சென்னைக்கு பார்சலில் கடத்திய ரூ.4.75 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்!

 

சென்னைக்கு பார்சலில் கடத்திய ரூ.4.75 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்!

சென்னை

நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு பார்சலில் கடத்திவரப்பட்ட 4.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நெதர்லாந்தில் இருந்து கொரியர் பார்சல் மூலம் சென்னைக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக, நேற்று சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கடைத்தது. தகவலின் அடிப்படையில், நேற்றிரவு நெதர்லாந்தில் இருந்து சரக்கு விமானத்தில் வந்த பார்சல்களை, சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

சென்னைக்கு பார்சலில் கடத்திய ரூ.4.75 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்!

அப்போது, நெதர்லாந்தில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பார்சலை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணைக்காக அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது, அந்த எண் உபயோகத்தில் இல்லாதது தெரியவந்தது.

இதனை அடுத்து, அந்த பார்சலை பிரித்து சோதனையிட்டபோது, அதில் 95 எம்.டி.எம்.ஏ போதை மாத்திரைகள் கடத்தியது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சுங்க அதிகாரிகள், போதை மாத்திரைகளை கடத்திய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.