மாதம் ரூ.3,000 கோடிக்கு மது, ரூ.1,343 கோடிக்கு சிகரெட், ரூ 522 கோடிக்கு பீடி..! – தமிழர்கள் திருந்துவார்களா?

 

மாதம் ரூ.3,000 கோடிக்கு மது, ரூ.1,343 கோடிக்கு சிகரெட், ரூ 522 கோடிக்கு பீடி..! – தமிழர்கள் திருந்துவார்களா?

அயராத உழைப்பிற்கு பெயர் எடுத்தவர்கள் தமிழர்கள். பகல் இரவு பாராமல் 24 மணி நேரமும் உழைக்கத் தயங்காதவர்கள். ஆனால் சமீப காலங்களாக இவர்கள் பாடு பட்டுச் சேர்த்த பணத்தை போதை வஸ்துகளுக்கு செலவழித்து சில மணித் துணிகளில் அந்தப் பணத்தை கரைத்து விடுகிறார்கள்.பலர் பணத்திற்கு கையேந்தி பிச்சைக்காரர்களாகக் கூட மாறி விடுகிறார்கள்.இவர்களைப் பற்றிய வேதனைத் தகவல் இது.

மாதம் ரூ.3,000 கோடிக்கு மது, ரூ.1,343 கோடிக்கு சிகரெட், ரூ 522 கோடிக்கு பீடி..! – தமிழர்கள் திருந்துவார்களா?

இந்திய மாநிலங்கள் முழுவதிலும் புகைலைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் பற்றிய ஆய்வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் டாடா சமூக அறிவியல் மையம் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின்படி தமிழகத்தில் கடந்த 2010 ல் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 16.2 சதவீதமாக இருந்தது. அதுவே 2017-ல் தமிழகத்தில் புகையிலை பயன்படுத்து வோரின் எண்ணிக்கை 16.2 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரித்தது.இதில் சிகரெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 6 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாகவும், ‘கைனி’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 0.5 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதும் தெரியவந்தது.

மாதம் ரூ.3,000 கோடிக்கு மது, ரூ.1,343 கோடிக்கு சிகரெட், ரூ 522 கோடிக்கு பீடி..! – தமிழர்கள் திருந்துவார்களா?

கடந்த 2010-ல் தமிழகத்தில் மாதந்தோறும் சிகரெட் வாங்குவதற்காக சராசரியாக செலவிடப்படும் தொகை ரூ.986.2 கோடியாக இருந்தது. அந்தத் தொகையானது சமீபத்தில் ரூ.1,345 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, பீடிக்காக மாதந்தோறும் சராசரியாக செலவிடப்படும் தொகை ரூ.243 கோடியில் இருந்து ரூ.525 கோடியாக அதிகரித்துள்ளது.

மாதம் ரூ.3,000 கோடிக்கு மது, ரூ.1,343 கோடிக்கு சிகரெட், ரூ 522 கோடிக்கு பீடி..! – தமிழர்கள் திருந்துவார்களா?

இதில் விசேஷம்..! முதல் முறையாக பீடி, சிகரெட் குடிக்கத் தொடங்குவோரின் வயது முன்பு தமிழகத்தில் 18 ஆக இருந்தது. அது தற்போது 20.6 ஆக மாறியுள்ளதும் தெரியவந்துள்ளது.

அதே சமயத்தில் இன்னொரு வேதனையான விஷயம், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கர்நாடகாவில் 28.2-லிருந்து 22.8 சதவீதமாகவும், கேரளாவில் 21.4-லிருந்து 12.7 சதவீதமாகவும், புதுச்சேரியில் 15.1-லிருந்து இருந்து 11.2 சதவீதமாகவும் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அதிகரித்து வருவதுதான். தமிழகத்தின் ஒரே ஒரு ஆச்சர்ய விஷயம் மூக்குப் பொடி போடுவதுதான். இங்கு100-க்கு 2 பேர்தான் மூக்கு பொடி போடுகிறார்கள். இதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதும் மனதிற்கு ஆறுதலான விஷயம்தான்.

மாதம் ரூ.3,000 கோடிக்கு மது, ரூ.1,343 கோடிக்கு சிகரெட், ரூ 522 கோடிக்கு பீடி..! – தமிழர்கள் திருந்துவார்களா?

இதே போல் தமிழகத்தில் ஆண்டுக்காண்டு மது விற்பனையும் உயர்ந்து கொண்டே போகிறது.கடந்த ஆண்டு கணக்குப்படி, மாதம் ஒன்றுக்கு தமிழர்கள் ரூ 3 ஆயிரம் கோடிக்கு மது வங்கி குடித்துள்ளனர். தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ தொடங்கப்பட்ட 1983ம் ஆண்டில் மது விற்பனை 183 கோடி ரூபாயாக இருந்தது. 2008-09 ஆண்டில் 10,601.5 கோடியாக உயர்ந்து, 2010-11 ல் 14,965 கோடிகளாக இருந்தது. 2016-17 ல் 31,247 கோடிக்கு விற்ற மது , கடந்த ஆண்டு ரூ 36 ஆயிரம் கோடியைத் தாண்டி விட்டது.

மாதம் ரூ.3,000 கோடிக்கு மது, ரூ.1,343 கோடிக்கு சிகரெட், ரூ 522 கோடிக்கு பீடி..! – தமிழர்கள் திருந்துவார்களா?

அதாவது சராசரியாக தமிழர்கள் மாதம் ரூ 3 ஆயிரம் கோடிக்கு மது குடிக்கிறார்கள். இந்தியாவின் மொத்த மதுபான நுகர்வில் 13 சதவிகித மதுபானத்தை நம் தமிழர்கள் மட்டுமே வாங்கிக் குடிக்கிறார்கள். பீடி,,சிகரெட், மது குடிக்கும் இவர்கள் எல்லோரும் என்று திருந்துவார்கள் என்பதே நாட்டின் நல்ல குடிமகன்களின் கவலையாக இருக்கிறது.

-இர. சுபாஸ் சந்திர போஸ்.