தென்காசி அருகே உரிய ஆவணமில்லாத ரூ.3 லட்சம் பறிமுதல்!

 

தென்காசி அருகே உரிய ஆவணமில்லாத ரூ.3 லட்சம் பறிமுதல்!

தென்காசி

தென்காசி அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 3 லட்சம் பணத்தை, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை அருகே இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜசிம்மன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட காரை மறித்து சோதனை நடத்தினர்.

தென்காசி அருகே உரிய ஆவணமில்லாத ரூ.3 லட்சம் பறிமுதல்!

இந்த சோதனையில் வாகனத்தில் 3 லட்சம் ரூபாய் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, வாகனத்தில் வந்த நபர், திருவனந்தபுரத்தை சேர்ந்த சுபாஷ் என்றும், சேலத்தில் மின்சாதன பொருட்கள் வாங்க பணத்தை எடுத்துச் செல்வதாகவும் கூறினார்.

ஆனால், அவர் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான பணம் சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.