நெய்வேலி என்.எல்.சி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

 

நெய்வேலி என்.எல்.சி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், திடீரென 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

நெய்வேலி என்.எல்.சி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

சமீபத்தில் 6 ஆவது யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 5 ஆவது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மரணங்கள் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நெய்வேலி என்.எல்.சி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

இந்த நிலையில் என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதே போல் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.