வேலூரில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.3.5 லட்சம் பறிமுதல்!

 

வேலூரில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.3.5 லட்சம் பறிமுதல்!

வேலூர்

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் அடுத்த மேலுமங்காபுரம் பகுதியில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரை மறித்து சோதனையிட்டதில், உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

வேலூரில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.3.5 லட்சம் பறிமுதல்!

இதுகுறித்து வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சரவணன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துச்சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை பெற்றுகொள்ள சரவணனுக்கு அறிவுத்தினர். தொடர்ந்து பறிமுதல் செய்த பணம், வேலூர் கோட்டாட்சியர் முன்னிலையில், மாவட்ட கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.