ரூ.3.18 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கருப்பணன் அடிக்கல்

 

ரூ.3.18 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கருப்பணன் அடிக்கல்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார்.

இதன்படி, அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாடி ஊராட்சியில், 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சந்தையை மேம்படுத்தும் பணியையும், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மயான ஓடையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

ரூ.3.18 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கருப்பணன் அடிக்கல்

மேலும், பூனாச்சி ஊராட்சியில் 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கள்ளுக்கடை மேடு முதல் நத்தமேடு வரையிலான சாலையை பலப்படுத்தும் பணிகளையும், முகாசிப்புதூரில் 45.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தியூர் – அம்மாபேட்டை சாலை முதல் சின்ன முளியனூர் வரையிலான சாலையை பலப்படுத்தும் பணியையும் தொடங்கி வைத்தார்.

அத்துடன், முகாசிபுதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளின்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணராஜ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தார்கள்.