சென்னையில் ரூ.29.74 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

 

சென்னையில் ரூ.29.74 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

சென்னை

வெளி நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 29 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த பயணி ஒருவரை பிடித்து, சோதனை மேற்கொண்டனர். அப்போது, தங்கத்தை பசையாக மாற்றி ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்து 4 தங்கப்பசை உருளைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் ரூ.29.74 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

இதேபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் துளையிடும் கருவிக்குள் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து இருவரிடமும் இருந்து சுமார் 29 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 588 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க கடத்தல் தொடர்பாக இருவரையும் கைதுசெய்து சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.