சென்னையில் ரூ.28 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது!

 

சென்னையில் ரூ.28 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது!

சென்னை

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணி கடத்தி வந்த ரூ.28 லட்சம் மதிப்பிலான அரை கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்தவர்களையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

சென்னையில் ரூ.28 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது!

அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த பயணி ஒருவரை, அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, தங்கத்தை பசை வடிவில் மாற்றி, ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் 3 உருளைகளில் இருந்த 578 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 28 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக அந்த பயணியை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.