‘கத்தியைக் காட்டி மிரட்டி’ தொழிலதிபரிடம் ரூ.27 லட்சம் பணம் கொள்ளை!

 

‘கத்தியைக் காட்டி மிரட்டி’  தொழிலதிபரிடம் ரூ.27 லட்சம் பணம் கொள்ளை!

கோவை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி தொழிலதிபரிடம் ரூ.27 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் சலாம் (50). இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். தொழில் சம்பந்தமாக இவர் அடிக்கடி தனது கார் டிரைவருடன் கோவை செல்வாராம். டிரைவர் பெயர் சம்சுதீன் (42). கோவைக்கு செல்லும் தொழிலுக்கு தேவையான பணத்தையும் உடன் எடுத்துச் செல்வாராம்.

‘கத்தியைக் காட்டி மிரட்டி’  தொழிலதிபரிடம் ரூ.27 லட்சம் பணம் கொள்ளை!

இந்த நிலையில், சலாம் மலப்புரத்தில் இருந்து நேற்று சம்சுதீனுடன் கோவைக்கு வந்திருக்கிறார். அதிபர்களுடன் தொழில் சம்பந்தமான ஒப்பந்தத்திற்காக ரூ.27 லட்சம் பணத்தையும் வைத்திருந்திருக்கிறார். இதனையறிந்த கொள்ளையர்கள், இன்று அதிகாலை அவர் மலப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது காரை வழிமறித்ததிடு, கத்தியைக்காட்டி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சலாமையும் சம்சுதீனையும் காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு அந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அதிர்ந்து போன தொழிலதிபர் சலாம், உடனே கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், சலாம் காரை பின்தொடர்ந்து வந்த காரை போலீசார் கண்டுபிடிக்க தொடங்கியுள்ளனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.