‘ரூ.27 லட்சம் பணம் வழிப்பறி’ : தொழிலதிபரின் கார் மீட்பு!

 

‘ரூ.27 லட்சம் பணம் வழிப்பறி’ : தொழிலதிபரின் கார் மீட்பு!

கோவை அருகே ரூ.27 லட்சம் பணம் பறிக்கப்பட்ட தொழிலதிபரின் கார் மீட்கப்பட்டுள்ளது.

கோவை நவக்கரை அருகே சென்று கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சலாமிடம் நேற்று ரூ.27 லட்சம் பணம் பறிக்கப்பட்டது. அவரது காரை திடீரென வழிமறித்த கொள்ளையர்கள், கார் டிரைவரையும் சலாமையும் காரில் இருந்து இறக்கி தள்ளிவிட்டு கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர். அதோடு, தொழிலதிபரின் காரையும் அவர்கள் ஓட்டிக் சென்றதாக தெரிய வந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

‘ரூ.27 லட்சம் பணம் வழிப்பறி’ : தொழிலதிபரின் கார் மீட்பு!

மேலும், கொள்ளையடித்தவர்களை கைது செய்ய 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கோவையில் திருடப்பட்ட கார் சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே இருந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார், அதிலிருந்த கை ரேகைகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.