அஸ்ஸாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்! – மோடி அறிவிப்பு

 

அஸ்ஸாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்! – மோடி அறிவிப்பு

அஸ்ஸாம் கன மழை, வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் மிக மோசமான அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அஸ்ஸாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்! – மோடி அறிவிப்பு21 மாவட்டங்களைச் சேர்ந்த 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

http://


இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் அறிவித்துள்ளார். அந்த ட்வீடில், “அஸ்ஸாம் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.