நம்பியூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை

 

நம்பியூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை

ஈரோடு

நம்பியூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள வரப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆறுமுகம் (42) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் டாஸ்மாக்கில் நாள்தோறும் வசூலாகும் பணத்தை இரவில் வீட்டுக்கு எடுத்துச் சென்று மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வசூலான 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். பழனி கவுண்டன்புதூர் பகுதி அருகே சென்றபோது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், ஆறுமுகம் மற்றும் அவரது நண்பரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.

நம்பியூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை

பின்னர், அவரிடம் இருந்த 2 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து தகவலின் பேரில் வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது நண்பரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இரவில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.