தி.நகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

 

தி.நகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

தி.நகரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர், மூசா தெருவில் உத்தம் என்னும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 4.125 கிலோ தங்க நகைகள், 15 தங்கக்கட்டி மற்றும் 15 வெள்ளிக்கட்டி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல கடையை திறப்பதற்காக வந்த நகைக்கடை உரிமையாளர்கள், கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக்க கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தி.நகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

உள்ளே சென்ற பார்த்த போது, ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளர்கள் 3 பேரும், மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.