சென்னையில் ரூ.2.53 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – 6 பேர் கைது!

 

சென்னையில் ரூ.2.53 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – 6 பேர் கைது!

சென்னை

சென்னையில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட 2 கோடியே 53 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் 24 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வளைகுடா நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்ல முயன்ற பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

சென்னையில் ரூ.2.53 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – 6 பேர் கைது!

இதில் 6 பயணிகள் தலைமுடிக்குள் மறைத்து நூதன முறையில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து சுமார் 2 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 55 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்த கரன்சிகளையும் சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தல் தொடர்பாக 6 பேரையும் கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.