சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ரூ.2.5 கோடி அபராதம் வசூல்!

 

சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ரூ.2.5 கோடி அபராதம் வசூல்!

சென்னையில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.2.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவது என்பது அனைவரும் அறிந்தவையே. உயிர்க் கொல்லியான இந்த கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாத மக்களோ, போதிய விழுப்புணர்வு இல்லாமல் மாஸ்க் போடாமல் சுற்றித் திரிகின்றனர். பல நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் கூட தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் எழுகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் மக்களிடம் கொரோனாவின் தீவிரத்தை பற்றிய புரிதலை உண்டாக்க, அவசர சட்டத்தை பிறப்பித்து அபராதம் விதிக்க முடிவெடுத்தது தமிழக அரசு.

சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ரூ.2.5 கோடி அபராதம் வசூல்!

இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாத தனிநபர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களிடமிருந்து ரூ.2.8 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இராயபுரத்தில் ரூ.44 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத காரணத்தால் இதுவரை 13.24 லட்சம் ரூபாய் வட்டாச்சியர் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.