மொடக்குறிச்சியில் ரூ.2.31 லட்சம் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

 

மொடக்குறிச்சியில் ரூ.2.31 லட்சம் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

ஈரோடு

மொடக்குறிச்சி அருகே மினி வேனில் கடத்திச்சென்ற 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டாடா ஏசி வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில், வாகனத்தில தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

மொடக்குறிச்சியில் ரூ.2.31 லட்சம் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

இதனை அடுத்து, சுமார் 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து மொடக்குறிச்சி மஞ்சக்காட்டு வலசை சேர்ந்த ஓட்டுநர் வேலுச்சாமியை கைதுசெய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில், குட்கா புகையிலை பொருட்களை பதுக்கிய, ஈரோடு மஜித்வீதியைச் சேர்ந்த ஜுபையா, கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த ஹனிபா, சாஸ்திரி நகரை சேர்ந்த அப்துல், திருநகர் காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.